[Representative Image]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை சற்று உயர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி இருக்கும் வேளையில் நேற்று தென் தமிழகத்திலும், மேற்கு தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது .
திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்தது.
திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்களும், பயிர் விதைத்த விவசாயிகளும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மேலூர் பகுதியில் 2 நாள்களாக அங்கங்கே லேசான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியிலும் மிதமான மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோட்டைமேடு பகுதியிலும் நேற்று மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலும் மிதமான மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதியிலும் மிதமான மழைபெய்ததால் வெயிலின் தாக்கத்தால் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல விதை விதைத்துள்ள விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளானார். இன்னும் சில நாட்கள் இதே போல மழை பெய்ய வேண்டும் காத்திருக்கின்றனர்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…