[Representative Image]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மிதமான மழை பெய்தது.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலும் கூடிய மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என பல்வேறு பகுதிகளின் மிதமான மழை பெய்தது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. மேலும், இன்னும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் வரும் ஜூலை 18ஆம் தேதி வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…