[Image source : iStock]
தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
தமிழகத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.
நேற்று, கடலூர், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரு சில இடங்களிலும் நாளை ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை மழை ஒரு பக்கம் பொழிந்தாலும், கடும் கோடை வெயில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயிலின் தாக்கம் இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…