முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை – என்னிடம் பேசவில்லை – முகிலனின் மனைவி பூங்கொடி தகவல் !

Default Image

சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார். முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த 4 மாதத்திற்கு மேலாக காணாமல் போய் இருந்த சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். நாளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட காவல்துறையால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலனை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி அவர்கள், முகிலன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு திட்டமிட்ட சதி என்று கூறிஉள்ளார்.

மேலும் , முகிலன் அவர்கள் தற்போது தெளிவான மனநிலையில் இல்லை என்றும், காவல் துறையினர் அவருக்கு குடிநீர், உணவு என ஏதும் தராமல் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது முகிலன் அவர்கள் ஏதும் பேசமுடியாமல் தெளிவான மனநிலையில் இல்லாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi