உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!
உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை காணொளி வாயிலாக நடந்து கொண்டிருந்தபோது, கழிவறையில் இருந்தபடியே பங்கேற்ற நபரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற பெயரில் பதிவு செய்த ஒரு நபர் கழிவறையில் அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி நிர்சர் எஸ். தேசாய் முன்பு நடந்த இந்த விசாரணை, காஸ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு நிமிட வீடியோவில், மஞ்சள் நிற சட்டை அணிந்த அந்த நபர், தனது மொபைல் ஃபோனை கழிவறை தரையில் வைத்து, புளூடூத் இயர்ஃபோன் அணிந்தபடி விசாரணையில் பங்கேற்றது தெரியவந்தது.
இந்த வழக்கு, காசோலை மோசடி (Negotiable Instruments Act) தொடர்பான ஒரு குற்ற வழக்கில் மனுதாரராக இருந்த அந்த நபர், ஒரு முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்யக் கோரிய மனுவில் பதிலளிப்பவராக இருந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், அவர் கழிவறையில் இருந்து எழுந்து, தன்னைச் சுத்தம் செய்து, பின்னர் வேறு அறைக்கு சென்று மீண்டும் வீடியோ காலில் வந்தார்.
இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, நீதிமன்ற அவமரியாதை குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு காணொளி விசாரணை வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதுபோன்ற அவமரியாதையான நடவடிக்கைகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதே போலவே, கடந்த மார்ச் மாதம் ஒரு நபர் கழிவறையில் இருந்து விசாரணையில் பங்கேற்றதற்காக ரூ.2 லட்சம் அபராதமும், சமூக சேவையும் விதிக்கப்பட்டது. அதைப்போல, கடந்த பிப்ரவரியில், படுக்கையில் இருந்து விசாரணையில் பங்கேற்றவருக்கு ரூ25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது கழிவறையில் இருந்தபடி விசாரணைக்கு பங்கேற்றவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025