காஷ்மீர் விவகாரத்தில் நிலைப்பாடு சரி இல்லை ! காங்கிரஸ் கட்சியின் கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் வெளியிட்டார்.அதில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு அக்கட்சி கொறடா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாட்டு மக்களின் உணர்வை காங்கிரஸ் புண்படுத்துவதாக கொறடா கருத்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025