பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த அதிர்ச்சி சம்பவம்.!

- தெலங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவரின் கவனக்குறைவால் பிரசவத்தின் போது சிசுவின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவரின் கவனக்குறைவால், பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த நிகழ்வு உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்பிணியான சாவித்திரி என்பவர் பிரசவத்திற்காக அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார். அப்போது குழந்தையின் தலை, அதன் உடலில் இருந்து துண்டாகியுள்ளது. ஆனால், இதை சாவித்ரியின் உறவினர்களிடம் மறைத்த மருத்துவர், தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணிக்கு பிரசவம் பார்த்த மருதுவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் இருப்பதாகவும், தலை வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், அச்சம் பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவரின் கவனக்குறைவால், பத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த நிகழ்வு உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025