ஆறு மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்.!

Default Image
  • கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது.
  • பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. இதில் ஏராளமான மற்றும் புதிய அறியவகை கருவாடுகள் பங்குபெறும். இச்சந்தை வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொடங்கும், ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த சந்தையில் கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் கருவடுகளை வாங்க சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அவ்வப்போது டீசல் விலை உயர்வு மற்றும் மீன்கள் வரத்துக் குறைவால் கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஜிஎஸ்டியால் கடந்த ஆண்டு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைவு காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிண்டனர். பின்பு நள்ளிரவு ஒரு மணியிலிருந்து காலை 6 மணி வரை நடைபெற்ற இன்றைய சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system