சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகல்.!

- சானியா மிர்சா ,இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட இருந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகினார்.
- ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு இருப்பதால் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறியுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் இன்று களம் காண உள்ளார்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரேன் வீராங்கனை நாடியாஉடன் சேர்ந்து 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சானியா – நாடியாஜோடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025