என் வாழ்வில் முக்கியமான படம் இது தான் – நடிகர் அசோக் செல்வன்

- என் வாழ்வில் முக்கியமான படம் இது தான்.
- எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை.
இயக்குனர் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே, இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வருகின்ற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில், ‘‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடமாக இயக்குனர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு செய்து இப்படத்தை உருவாக்கினோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, எல்லாருக்கும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025