கொரோனா தடுப்பு பணிக்கு 2 கோடி நிதி கொடுத்த சிட்டி யூனியன்.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதையெடுத்து கொரோனா தடுப்பு பணிக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கி , பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி யும் , தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கி உள்ளது.
வழங்கப்பட்ட இந்த 2 கோடி நிதியானது சிட்டி யூனியன் வங்கியும், வங்கி இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள்என அனைவரும் இணைந்து 2 கோடி வழங்கியுள்ளனர் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025