BREAKING:இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க ஸ்டாலின் கோரிக்கை.!

கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் , நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இன்று காலை 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக சார்பில் காணொளி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் மேலும் தாமதத்தை தவிர்த்து விடவேண்டும் .
இதையெடுத்து நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் காணொளி மூலம் கூட்டம் நடத்தினோம் என தெரிவித்தார்.மேலும் எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிடில் மீண்டும் அடுத்தகட்ட கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயர்ந்தோர் எண்ணிக்கை 14 ஆக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025