ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற திரெளபதி பட நடிகர் கைது!

இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மது கடைகள் மூடப்பட்டு உள்ளது.இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்று வருபவர்களை போலீசார் கைது வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.கே நகர் பிருந்தாவன் நகர் பகுதியில் ரிஸ்வான் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்த போது அவர் சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்ததும். அவரிடம், இருந்து 69 மதுபாட்டிலும் மற்றும் ரூ.2500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரிஸ்வான் துணை நடிகர் என்பதால், சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வந்தததும் தெரிய வந்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025