கொரோனாவுக்கு எதிரான போர் – மக்களுக்கு மோடி பாராட்டு.!

Default Image

மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட ஊரடங்கு நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் Unlock 1.0 என்று அடிப்படையில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், இன்று சரியாக 11 மணி அளவில் மனதின் குரல் அதாவது, மன் கீ பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா குறித்தும் ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் பேசினார். அதில், கொரோனா வைரசுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் சேவை மனபான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸ், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மேலும், பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைதான் உலகமே உற்றுநோக்கியுள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் தான் வைரஸில் இருந்து நன்மை காத்துக்கொள்ள முடியும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts