எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.!

Default Image

எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தேவையானது குறைய தொடங்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டு வந்தது. ஆனால், தற்போது  இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96-க்கும் ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 க்கும் விற்படுகிறது.

ஏழை,எளிய மற்றும்  நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts