தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கமா ? முதலமைச்சர் பழனிசாமி பதில்

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்க உள்ளேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.எனவே வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .
இந்நிலையில் திருச்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.அதன் பின்னர் அவர் பேசுகையில், வல்லுநர்களுடனான ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவிப்பை பொறுத்து பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025