#Breaking: சிறுமி எரித்து கொன்ற வழக்கு.. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள், வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்கு-மூலம் மூலம் போலீஸார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனர். மேலும், சிறுமியை எரித்து கொன்ற முருகன், கலியபெருமாள் மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குண்டர் சட்டத்திற்கு எதிராக குற்றவாளிகள் முருகன் மற்றும் கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025