சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சாதி சான்றிதழ்களில் உள்ள பெயர் முரண்பாடுகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், சமூகநீதி மற்றும் ஆவணங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டது. சாதி சான்றிதழ்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு அவசியமான ஆவணமாகும். இந்த சான்றிதழ்கள் […]
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். இந்த சோதனையில், அமலாக்கத்துறை ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவர்கள் இதை நிதி முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக செய்ததாக கூறினர். ஆனால், இந்த சோதனை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, இந்தச் சோதனையில், டெண்டர் செயல்முறைகள், மதுபான விலை நிர்ணயம், பார் உரிமங்கள், மற்றும் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும், ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய […]
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பு மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு ஆகியோரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டால், விசாரணை பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை மிரட்டவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வாதிடப்பட்டது. இதை ஏற்று, நீதிபதி ரகுகணேஷின் ஜாமீன் […]
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகள் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் அறிக்கையின்படி, இந்த சோதனையின் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் […]
சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர் கோடு முறையில் விற்பனை நடைமுறைக்கு வருகிறது. அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக ஆர்.கே.நகர் நிர்வாகி நித்தியானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக […]
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி […]
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது. ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி […]
கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை […]
அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை […]
அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. அதாவது, கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த […]
ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதை தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான கால கேடு இந்த டிசம்பர் 31 வரையில் என குறிப்பிட பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கையில், வாடகை வீட்டில் குடியிருப்போர், […]
டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை […]
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது. இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி […]
மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை […]
எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். அரசு ஒவ்வொரு துறைக்கும் அதன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கும். அதனை அரசு அதிகாரிகள் அந்தந்த துறை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தவில்லை. பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று […]
காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால், அந்த குற்றசாட்டு ஆதாரம் இல்லாமல் சுமத்தப்பட்டால் குற்றம் சுமத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை அறிந்து, ஆராய்ந்து செயல்பட வேண்டும் எனவும் உஉயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, காவல்துறையினர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.