கொடநாடு வழக்கு – ஈபிஎஸ் சாட்சியப்பதிவு தாக்கல்..!

EPS

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது.

இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த ஆணையர் மூலம் தனது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய அனுமதி  வேண்டும் ஈபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை- நீதிமன்றம் உத்தரவு..!

இந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், சாட்சியப்பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்பட்டார். இதன்படி ஜனவரி 4-ஆம் தேதி ஈபிஎஸ் இல்லத்தில் சாட்சியப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன் ஆஜராகி, எடப்பாடி பழனிசாமிடம் சாட்சி பதிவு முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services