புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா.. 2 நாட்களுக்கு மூடல்!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025