தமிழகத்தில் ரூ.10,399 கோடி மதிப்பில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து!

தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்து.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்காரணமாக, தமிழக தொழில் துறை சார்பில் ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமை செயலகத்தில் கையெழுத்தாகியுள்ளது.
அதில் 5 திட்டங்கள் நேரடியாகவும், எஞ்சியுள்ள 3 திட்டங்கள் காணொலி காட்சி மூலமாக முதல்வர் கையெழுத்திட்டார். இதன்மூலம் 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025