2020 உலகக்கோப்பை நடைபெறுமா..? இல்லையா..? மீண்டும் ஐ.சி.சி ஆலோசனை.!

ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சாத்தியல்லை என சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதனால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் ஐ.சி.சி. இது குறித்து பேசாமல் மவுனம் காத்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மூன்று முறை ஐ.சி.சி. ஆலோசனை நடத்தியது. அப்போது, உலக கோப்பை போட்டி குறித்து அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் உலக கோப்பை போட்டி நடத்துவதா..? அல்லது தள்ளிவைப்பதா..? என்பது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற இருந்த 13-வது ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல் நடத்துவது குறித்து முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025