வாஜ்பாய் நினைவு தினம்.. குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை.!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். வாஜ்பாய் 10 முறை லோக்சபாவிற்கு, ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025