சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல – அமைச்சர் வேலுமணி

Default Image

சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் தனகராக கருதப்படும் சென்னை ஒரு சிறப்பு வாய்ந்த நகரம் என்றே சொல்லலாம். இந்த நகரம் இன்று தான் 381-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.எனவே அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பேரழிவு பேரிடர் பல எதிர்கொண்டாலும் வீழ்வேனென்றுநினைத்தாயோ என்று தன் மக்களின் தன்னம்பிக்கையால் காலமெல்லாம் சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல,பல கனவுகளுடன் சிறகடித்து பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வை வர்ணஜாலமாக உருமாற்றி, வந்தாரை வாழ வைக்கும் என்றைக்கும் வளர்ச்சிப் புகழ் வற்றாத ஜீவநதி! தமிழகத்தின் தலைவாசலான நம்ம சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts