3,000 அடி உயரத்தில் விமானத்திற்கு இணையாக ஜெட்பேக் -ல் பறந்த நபர்.!

விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் 3,000 அடி உயரத்தில் நபர் ஒருவர் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் அடி உயரத்தில் மேலே விமானம் ஒன்று சென்றுள்ளது. அதற்கு இணையாக அதாவது விமானத்திற்கு மிக அருகே ஜெட்பேக்-ல் நபர் ஒருவர் பறந்து சென்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன்ஸ் மற்றும் ஜெட்புளு விமானிகள் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெட்புளு விமானிகள் கூறியதாவது, ஜெட்பேக்-ல் பறந்து சென்ற நபர் 30 அடி தூரத்தில் தங்களது விமானத்திற்கு மிக அருகில் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து தற்போது இச்சம்பவம் குறித்த விசாரணையை FBI தொடங்கியுள்ளது. மேலும் விரைவில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடித்த விடுவோம் என்றும் FBI உறுதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025