விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!

நேற்று மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மோடி அரசு இந்த வரலாற்று மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஒரு ஊக்கத்தை அளிக்கும். மேலும் அவர்களை இடைத்தரகர்கள் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கும்.
இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும்.
இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள். நாட்டின் செழிப்பு மற்றும் செழிப்பைத் தாங்கியவர்கள், முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது. மோடி அரசு விவசாயிகளின் வலுவூட்டலுக்காக இரவும், பகலும் உழைத்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.
मोदी सरकार के यह ऐतिहासिक विधेयक किसानों व कृषि क्षेत्र को बल देंगे और उनको बिचौलियों व अन्य समस्याओं से मुक्त करेंगे। इन विधेयकों से किसानों को उनकी उपज बेचने के लिए नये अवसर प्राप्त होंगे, जिससे उनकी आय में वृद्धि होगी। #JaiKisan
— Amit Shah (@AmitShah) September 18, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025