மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வதுடன் சந்திப்பு

மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025