5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தை – உணவுகுழாயிலிருந்து அகற்றம்!

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தையின் உணவுகுழாயிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்து உள்ள கொழுந்தம்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது மகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்நிலையில் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் சென்றுள்ளனர்.
குழந்தையின் கழுத்து பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழாயில் அந்த ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக மருத்துவ குழுவினர் இணைந்து குழந்தைக்கு சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் டியூப் மூலமாக நாணயத்தை வெளியில் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025