28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வருகின்ற 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசும் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டது.இதனிடையே நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.இதனால் ஒரு சில இடங்களில் வெள்ளம் தேங்கியது.இதனால்அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் பேசுகையில், வரும் 28-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வட தமிழகத்தில் இயல்பை ஒட்டியே மழை இருக்கும்.தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக மழை இருக்கும்.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025