இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற, போட்டியின் நான்காவது நாளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
ஆட்டம் முடியும் வரை, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக களத்தில் ஜாக் க்ரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
போட்டி முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஆட்டம் ட்ரா ஆகவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஸ்கோரை இங்கிலாந்து சேஸ் செய்யுமா? என்ற கேள்வி எல்லாருடைய மத்தியிலும் இருக்கும். கடந்த 2022ம் ஆண்டு இந்தியா அணி 378 ரன்களை இலக்காக நிர்ணயித்த போது இங்கிலாந்த் அணி அதனை சேஸ் செய்து அபார பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 96 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக, கே.எல். ராகுல் (137) மற்றும் ரிஷப் பந்த் (118) சதம் என இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தனர். குறிப்பாக,, டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். முதல் இன்னிங்சில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்தார்.
ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். சொல்லப்போனால், கேப்டன் ஷுப்மான் கில் (8), ஷர்துல் தாக்கூர் (4) உட்பட ஆறு வீரர்களால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை அவுட்டாகினர். இருப்பினும், ரவீந்திர ஜடேஜா 25 ரன்களும், கருண் நாயர் 20 ரன்கள் அடித்தனர். அதன்படி, ஜடேஜா மட்டுமே 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகாமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஷோயப் பஷீர் இரண்டு விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப்பொது, நான்காவது நாள் ஆட்டம் முடிந்தது. ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து எந்த விக்கெட்டையும் இழக்காமல் 21 ரன்கள் சேர்த்தது.
இந்திய வீர்கள் என்ன செய்ய வேண்டும்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை வெல்லப்போவது யார் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிநாளான இன்று 90 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 350 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், போட்டியை வெல்ல இந்தியா 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
இதுவரை டெஸ்ட்டில் 350+ ரன்களுக்கு அதிகமான ரன்களை ‘Defend’ செய்யும்போது இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த 59 போட்டிகளில் 42 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு தோல்வி, 16 போட்டிகளை டிரா செய்துள்ளது இந்திய அணி. என்ன நடக்க போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025