கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரிய முஸ்லீம் இளைஞர்… பின்னர் நடந்த கொடூரம் .!

கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி முஸ்லீம் இளைஞர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்க, அதனை மறுத்ததால் பெண்ணை கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி அவரது பெற்றோரிடம் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேட்டுள்ளார் . ஆனால் அதனை அந்த பெண்ணின் பெற்றோர்கள் நிராகரித்ததை அடுத்து முஸ்லீம் இளைஞர் கிருஸ்துவ பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
சோனியா என்ற கிருஸ்துவ பெண்ணை மூஸ்லீம் இளைஞரான ஷெஜாத் என்பவர் திருமணம் செய்து வைக்க கோரி சோனியாவின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அவருடன் ஷெஜாத்தின் தாயாரும் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் அவரது திருமண ஆசையை நிராகரித்துள்ளனர். அதனையடுத்து பெண்ணை ஃபைசான் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த நாளன்று ஃபைசனுடன் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை ஷெஜாத் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். அதனையடுத்து ஷெஜாத் அங்கிருந்து தப்பி சென்றதாகவும், பெண்ணினுடன் இருந்த ஃபைசானை ராவல்பிண்டியில் உள்ள கோரல் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் முக்கிய குற்றவாளியான ஷெஜாத்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025