”ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம்’ – தீரன், ஜி.கே.மணி சொன்ன தகவல்.!
ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது என்று பாமகவின் முக்கிய உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் வலுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 5) இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது. ஆம், ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில் தைலாபுரத்தில் நேற்றைய தினம் சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றயை தினம், ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. சமரசம் பேசவே பாமக தலைவர் அன்புமணி நேற்று தைலாபுரத்திற்கு வந்தார்.
நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பூம்புகார் மகளிர் மாநாட்டு வேலையை பாருங்க என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்த பின் பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இதைதொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் இருவரிடையே ஏற்பட்ட பேச்சுவார்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் மற்றும் அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, பாமகவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமதாஸ் – அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும், அதற்கான தொடக்கமாக இதை பார்க்கலாம். பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். நாங்க அடக்கமா அமைதியா இருக்க நினைக்கிறோம்! கட்சி குடும்பம் மாதிரி! இதை வெளியில் பேச கூடாது! இங்க பிரச்சனையில்லை, வதந்திகளை நம்பாதீங்க” என்று கூறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025