காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்திய அண்ணா ஹசாரே…!

எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதுடன், சனிக்கிழமை முதல் எனது முன்மொழியப்பட்ட காலவரையற்ற விரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன்.
அண்ணா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஜனவரி 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஜனவரி 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் அந்தந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும், இது எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா ஹசாரே தற்போது எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. சனிக்கிழமை முதல் எனது முன்மொழியப்பட்ட காலவரையற்ற விரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025