அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வாலாஜா பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் .மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் .தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு – பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் – கொள்ளையடிப்பதற்காகவே உறவினர்களுக்கு டெண்டர் என அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025