அமமுக வீசும் வலையில் சிக்காத சிங்கம் என்ற மீன்களாக தான் அதிமுகவினர் இருப்பார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள்.
நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டிடிவி தினகரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அமமுகவினர், எந்த வகையிலாவது அதிமுகவினர் வருவார்களா? என வாசலை திறந்து வைத்துக் கொண்டு முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஒரு தொண்டன் கூட அந்த கட்சியில் சேர மாட்டான். அந்த பக்கமே திரும்ப மாட்டான். எனவே அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025