எதிர்க்கட்சி தலைவர் யார்? – தொடங்கியது அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம்!!

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை தற்போது தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை முடிந்த பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற முடிவு எதுவும் எட்டாத நிலையில் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025