பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்த அமைச்சர் பொன்முடி..!

Default Image

2011-க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், காணொலி மூலம் கலந்துரையாடினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இன்று முதல் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளார். இது 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும், 2017 ரெகுலேஷன் மாணவர்களுக்கு முதுகலை, இளங்கலை படிப்புக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும் . 2013 ரெகுலேஷன்படி படித்த யு.ஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வுகள் தொடங்கும் என்றும், கடந்த முறை தேர்வு எழுதாமலும் , கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-க்குள் கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் 15.06.2021 தொடங்கி 15.07.2021-க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 30.07.2021-க்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY