மழை வெள்ளப்பாதிப்பு : களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு..!

தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான இடங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என பலரும் பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். வெள்ளநீரை வெளியேற்று பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு, பாதிப்புகளை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025