#BREAKING: குல்காமில் என்கவுண்டர்.! 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!

குல்காம் என்கவுண்டரில் இதுவரை 2 அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காமில் உள்ள பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது, அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மறைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்க ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தற்போது வெளியான தகவலின்படி, 2 அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், மேலும், தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருப்பதாகவும், காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#KulgamEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/BPKPWC7iJM
— Kashmir Zone Police (@KashmirPolice) November 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025