ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 -ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில் இருவரும் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் தந்த புகாரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவுபடி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மிலானி தொடர்ந்த வழக்கில் தேனி சிறப்பு நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025