மார்ச் 12 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு;இன்று முதல் விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!

டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு இன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025