எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு- சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்திய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்யும் உத்தரவை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025