#BREAKING : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா…!

Default Image

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார்.

கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கருநாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈஸ்வரப்பா மீது காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services