டிராபிக் சிக்னல் கேமராவில் சிக்கிய நபர்..! வீட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் சிறைக்கு சென்ற பரிதாபம்..!

Arrest

அபராத ரசீதில் வேறு ஒரு பெண் ஸ்கூட்டரில் இருப்பதை மனைவி பார்த்ததால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதான கணவர். 

கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி சென்றுள்ளார். இது டிராபிக் சிக்கினால் கேமராவில் பதிவாகிய நிலையில் அவரது அபராத ரசீதில் அவருடன் வேறு ஒரு பெண் ஸ்கூட்டரில் இருப்பதை மனைவி பார்த்ததால் குடும்பத்தில் பிரச்சினை  ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த அவரது கணவர் வழியில் லிப்ட் கேட்டு அந்தப் பெண் ஏறியதாக கூறி சமாளித்துள்ளார். இருப்பினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது தகராறில் முடிந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் தன்னையும் குழந்தையையும் தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்