அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான்- ஜெயக்குமார்

அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான் என ஜெயக்குமார் பேட்டி.
இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு, அவர்களது உறவினர்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை .போது ஐ.டி அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல். செந்தில்பாலாஜி சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.
அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான். ஐடி ரெய்டிற்கு போலீசார் உரிய பாதுகாப்பு தர தவறியுள்ளனர் கரூர் மாவட்ட எஸ்பி மீதும் தவறு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் திமிங்கலங்கள் அதிகம் உள்ளனர். பணக்கார குடும்பத்தை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025