ரயில் விபத்துக்கு பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும்..! மல்லிகார்ஜுன் கார்கே

MallikarjunKharge-PMModi-ashwinivaishnaw

ரயில் விபத்துக்கு பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நேற்று பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து காரணமாக தேசிய அளவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், முடிந்த மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முழு காங்கிரஸ் கட்சியினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பல காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் உள்ளன. அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

Kharge statement
Kharge statement

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்