ஒடிசா விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு.!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார், மற்றும் மருத்துவமனைக்கும் நேரில் சென்று காயமடைந்தவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பிற்பகல் 2மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 747 பேர் காயமடைந்ததாகவும், 56 பேருக்கு மிகவும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.