விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித போப் பிரான்சிஸ்.
ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புனித போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்தனைகள் செய்துகொள்கிறேன், காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா அமைதியடைய வேண்டும் எனவும் புனித போப் பிரான்சிஸ்கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025