மணப்பாறை அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து…5 பேர் உயிரிழந்த பெரும் சோகம்.!!

RoadAccident

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கல்கொத்தனூர் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்த நிலையில், அந்த கார் மீது அரசு பேருந்து மோதி இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், கார் மீது மோதியதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதன் காரணமாக அதில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த அடுத்த நொடியே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறியுள்ளார்கள். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்