பாட்னாவை அடுத்து காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! தேதிகள் அறிவிப்பு .!

பாட்னாவை அடுத்து ஜூலை 17, 18இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வரும், ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரின் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து 2வது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இடம் தேதி மாற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ஜூலை 17, 18 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கர்நாடகாவுக்கும், தமிழக அரசுக்கும் மேகதாது அணை விவகாரத்தில் உரசல் நிலவி வருவதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டம் மாற்றப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டதால் திமுக அதில் பங்கேற்குமா, என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
After a hugely successful All-Opposition meeting in Patna, we will be holding the next meeting in Bengaluru on 17 and 18 July, 2023.
We are steadfast in our unwavering resolve to defeat the fascist and undemocratic forces and present a bold vision to take the country forward.
— K C Venugopal (@kcvenugopalmp) July 3, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025